
பருவம் மற்றும் இரகங்கள்
| மாவட்டம், பருவம் | இரகங்கள் |
| நீலகிரியை தவிர அனைத்து மாவட்டங்களுக்கும் பயிரிட ஏற்றது | கோ 1 |
| ஜீன்-ஜீலை எல்லா வருட்த்திற்கும் ஏற்றது | கோ 2 |
விதை அளவு
| இரகங்கள் | விதையளவு கிலோ, எக்டர் | |
| கோ 1 | 20 | 10 |
| கோ 2 | 25 | 120.5 |
மொச்சை இரகங்களின் இயல்புகள்
| பண்புகள் | கோ 1 | கோ 2 |
| பெற்றோர் | தனிவழித் தேர்வு | |
| வெளியிட்ட ஆண்டு | 1980 | |
| 50 சதம் பூக்கும் நாட்கள் | 75-90 | |
| வயது (நாட்கள்) | 140 | |
| மகசூல் (கிலோ, எக்டர்) | ||
| மானாவாரி | 1600 | |
| இறவை | ||
| செடியின் தோற்றம் | நடு நேரான மற்றும் குத்தானது (தொடர் வளர்ச்சி நிலை) ஆடி பருவத்திற்கு மற்றும் ஏற்றது | நேரான மற்றும் குத்தானது (தொடரா வளர்ச்சி நிலை) எல்லா பருவத்திற்கு மற்றும் ஏற்றது |
| செடியின் உயரம் (செ.மீ.) | 60-70 | 60 |
| பூவின் நிறம் | ஊதா | ஊதா |
| காயின் நிறம் | பச்சை | பச்சை |
| காயின் வடிவம் | தட்டையானது | தட்டையானது |
| விதையின் நிறம் | கருப்பு | கருப்பு |
| 100 விதை எடை (கிராம்) | 24.4 | 20.0 |
பயிர் மேலாண்மை
நிலம் தயாரித்தல்
நிலத்தை நன்றாக உழ வேண்டும்
விதை நேர்த்தி
விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு விதைகளை கார்பன்டாசிம் அல்லது 2 கிராம் ஒரு கிலோ விதைக்கு என்ற அளவில் விதை நேர்த்தி செய்யவேண்டும்
விதைகள் கீழ்க்கண்ட இடைவெளியில் ஊன்ற வேண்டும்
| இரகங்கள் | இடைவெளி | |
| தனிப்பயிர் | கலப்புப்பயிர் | |
| 90 செ.மீ. 30 செ.மீ. | 200 செ.மீ. ஒ 30 செ.மீ. | |
| 45 செ.மீ. ஒ 15 செ.மீ. | 200 செ.மீ. ஒ 30 செ.மீ. | |
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
உரமிடுதல் அடியுரமாக எக்டருக்கு கீழ்க்கண்ட அளவில் உரம் இடவேண்டும்
| பயிர் | ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள் (கிலோ) | ||||
தழை | மணி | சாம்பல் | கந்தகம் | ||
| தட்டைப்பயிர் | மானாவாரி | 12.5 | 25 | 12.5 | 10 |
| இறவை | 25 | 50 | 25 | 20 | |
குறிப்பு: மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட் உரம் மூலம் இடவில்லை எனில் ஜிப்சம் மூலமாக கந்தக சத்தை இடவும். அடியுரமாக இறவைப் பயிருக்கு எக்டருக்கு 25 கிலோ ஜிங் சல்பேட் இடவும்
களை நிர்வாகம்
விதைத்த மூன்றாவது நாளில் பென்டிமெத்தலின் களைக்கொல்லியினை எக்டருக்கு 2 லிட்டர் என்ற அளவில் 500 லிட்டர் தண்ணீருடன் கலந்து கைத் தெளிப்பான் கொண்டு தட்டை விசிறி வடிவ நாசிலை உபயோகித்து தெளிக்கவும். பின்பு விதைத்த 40 45 நாட்கள் கழித்து கைக்களை எடுக்கவும் இல்லையென்றால்
விதைத்த 25 நாட்களுக்குள் ஒரு களையும், பின்பு 45-வது நாளில் ஒரு களையும் எடுக்க வேண்டும்
விதைத்த 25 நாட்களுக்குள் ஒரு களையும், பின்பு 45-வது நாளில் ஒரு களையும் எடுக்க வேண்டும்
நீர் நிர்வாகம்
விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த மூன்று நாட்கள் கழித்து உயிர்த் தண்ணீர் கட்ட வேண்டும். மண் மற்றும் பருவநிலையைப் பொறுத்து 7-10 நாட்களுக்கு ஒரு முறை நீர் கட்ட வேண்டும். பயிர் பூக்கும் தருணத்திலும் காய்க்கும் தருணத்திலும் நீர் கட்ட வேண்டியது மிக அவசியம். வளர்ச்சிப் பருவத்தில் தண்ணீர் தேங்காமல் இருப்பது அவசியம். பயிர் நிலத்தில் ஈரம் குறைவாக இருந்தால் 0.5 சதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலை இலைவழி உரமாக தெளிக்கவேண்டும்.
அறுவடை
நன்கு முற்றிய காய்ந்த காய்களை பறித்து தானியமாக பயன்படுத்தலாம். பச்சை காய்களை பறித்து காய்கறியாக பயன்படுத்தலாம்.
0 கருத்துகள்